படைத்தவன் அவனே! ஆள்பவனும் அவனே!

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.  – (திருமந்திரம் – 446)

விளக்கம்:
சிவபெருமான் ஏழு உலகங்களையும் படைத்து அவற்றை எல்லாம் தன்னுடைய உடைமையாகக் கொண்டான். வானுலகில் உள்ள தேவர்களை எல்லாம் படைத்தவன் அவனே! அவர்களை எல்லாம் ஆள்பவனும் அவனே! இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அவனே படைத்து ஆள்கிறான். எல்லாவற்றையும் படைத்தவன் நம் சிவபெருமான் என்பதால், அவனே மேலானவனாகிறான்.