கரு உருவாகும் விதம்

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.  – (திருமந்திரம் – 455)

விளக்கம்:
ஆண் பெண் கூடலின் போது, விரிகின்ற யோனியில் ஆண்குறியின் சுக்கிலம் விழுகிறது. அவ்விதம் சேரும் சுக்கிலத்தோடு ஐந்து பூதங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கன்மேந்திரியங்கள் ஆகியவை உருவாகும் புதிய உயிரின் பருவுடலுக்குக் காரணமாகச் சேர்கின்றன. அந்தப் பருவுடல் வளரத் தேவையான இதர தன்மாத்திரைகளும், அந்தக்கரணங்களும் அந்த உயிரின் நெற்றியிலும் உச்சந்தலையிலும் ஒளிரும் படியாகச் சேர்கின்றன.