கர்ப்பத்தில் குழந்தை நினைவு பெறும் முறை!

கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.  – (திருமந்திரம் – 460)

விளக்கம்:
கர்ப்பத்தில் தனியாக இருக்கும் சிசுவுக்கு, மாயாள் தத்துவங்களைச் சேர்ப்பாள். தத்துவங்கள் சேரும் போது, அக்குழந்தை தன்னுடைய பேருறக்கத்தில் இருந்து விழித்து நினைவு பெறும். வலிமை மிக்க முன்வினைப் பயன்களாகிய தர்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதர்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம் ஆகிய எட்டுக் குணங்களையும் அந்தக் குழந்தை பெறும். வேதம் படிப்பதால் ஏற்படும் தெளிவைப் போன்ற ஒர் தெளிவான உணர்வினை அந்தக் குழந்தை பெறும்.