இந்த உடலே நம் வீடு!

என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே.  – (திருமந்திரம் – 461)

விளக்கம்:
நம்முடைய உயிர் இன்பமாகத் தங்குவதற்காக இந்த உடலை இறைவன் அமைத்திருக்கிறான். இந்த உடல் எலும்புகளால் பின்னப்பட்டு, நரம்புகளால் கட்டப்பட்டு, குருதியுடன் சேர்ந்த இறைச்சியால் அமைக்கப்பட்டிருக்கிறது. நமக்கெல்லாம் நன்மை மட்டுமே செய்யும் அந்த இறைவனை எப்போதும் நினைத்திருந்து நாடுகிறேன்.