கருவில் இருக்கும் குழந்தை சுவாசம் பெறும் முறை!

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்
இதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.  – (திருமந்திரம் – 462)

விளக்கம்:
கருவில் உள்ள குழந்தை, தாயின் சுவாசத்தையே தானும் சுவாசமாகப் பெறுகிறது. தாயின் சந்திரகலையாகிய மூச்சுக்காற்று குழந்தைக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. தாயின் சூரியகலையாகிய மூச்சுக்காற்று வெப்பத்தைத் தந்து குழந்தையைக் காக்கிறது. நமது சிவபெருமான், வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் தாயின் மூலாதாரத்தில் வெப்பம் மிகாதவாறு தடுத்துக் குழந்தையை காக்கின்றான்.

One thought on “கருவில் இருக்கும் குழந்தை சுவாசம் பெறும் முறை!

Comments are closed.