பாவச் சுழிகளிலிருந்து நம்மைக் காக்கிறான்!

ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.  – (திருமந்திரம் – 463)

விளக்கம்:
ஒரு உயிர் தன்னுடைய முன்வினைகளைத் தீர்ப்பதற்காகவே புதிதாகப் பிறவி எடுக்கிறது. நாம் கருவில் தோன்றிய நாளில் இருந்தே, சிவபெருமான் நம்மை பல வழிகளிலும் மேன்மை அடையச் செய்து, நம்முடைய முன்வினைகளைத் தீர்க்கிறான். பாசப் பற்றினில் எளிதாகச் சிக்கி விடக்கூடிய நம்மை, நாம் கருவினில் தோன்றிய நாளில் இருந்தே, பாவங்களில் விழுந்து விடாமல் காத்து அருள்கின்றான்.

One thought on “பாவச் சுழிகளிலிருந்து நம்மைக் காக்கிறான்!

Comments are closed.