விந்துவை செலுத்தும் வாயு

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே.  – (திருமந்திரம் – 480)

விளக்கம்:
ஆண் பெண் கூடலின் போது, விந்துவை செலுத்தும் வாயுவானது குறைந்திருந்தால், பிறக்கும் குழந்தை உயரம் குறைந்ததாக இருக்கும். பாய்ச்சும் வாயு மெலிந்திருந்தால், பிறக்கும் குழந்தை முடமாக இருக்கும். விந்துவை செலுத்தும் வாயு தடைப்பட்டால், பிறக்கும் குழந்தை கூனாக இருக்கும். இதையெல்லாம் பார்க்கும் போது, ஆணின் விந்தைப் பாய்ச்சும் வாயு ஒன்று இருப்பது போல, பெண்களின் சுரோணிதத்தை பாய்ச்சும் வாயு என்று எதுவும் இல்லை என்பது புரியும்.