இயம நியமத்தில் இருப்பவர்க்கே தானம் செய்ய வேண்டும்

ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்கு
ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே.  –  (திருமந்திரம் – 506)

விளக்கம்:
யோக நெறியில் சொல்லப்படும் இயம நியமங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கே தானம் செய்ய வேண்டும். இயம நியமங்களில் இருந்து விலகினால் ஏற்படும் தீமைகளைப் பற்றித் தெரிந்தும் அந்நெறியில் விரும்பித் தங்காதவர்களுக்குத் தானம் செய்யக்கூடாது. அது பெரும்பிழை ஆகும்.

இயமம் – தவிர்க்க வேண்டிய தீய விஷயங்கள். நியமம் – கடைபிடிக்க வேண்டிய நல்ல பழக்கங்கள்.