தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சாதார்ககு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.  –  (திருமந்திரம் – 508)

விளக்கம்:
நாம் கொடுக்கும் தானம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், சிவபெருமானே நம் முன்னே நின்று ஈகின்றான் எனக் கை கூப்பி வணங்கிக் கொடுக்க வேண்டும். நிலத்தளவு தானம் செய்தாலும், மலையளவு தானம் செய்தாலும், ஈசனை நினையாமல் கொடுத்தால் தானம் கொடுத்தவரும் தானம் பெற்றவரும் மீள முடியாத நரகக் குழியிலே விழுவார்கள்.