கோயிலில் இருந்து ஒரு கல்லைக்கூட எடுக்கக்கூடாது

கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.  –  (திருமந்திரம் – 516)

விளக்கம்:
திருக்கோயில் மதில்ச்சுவரின் கல் ஒன்றை எடுப்பது கூட சிவ ஆணைப்படி குற்றமாகும். அக்கல்லை எடுப்பது அக்கோவிலைக் கட்டியவராகவே இருந்தாலும், தவமுனிவரானாலும், வேதம் சொல்லும் அந்தணர் ஆனாலும் சிவபெருமானின் ஆணைப்படி தண்டனை உண்டு. திருக்கோயிலில் திருட்டு நடக்காமல் காக்கும் பொறுப்பு அந்நாட்டு மன்னருக்கு உண்டு. அதனால் அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் நாட்டு மன்னருக்கும் தண்டனை உண்டு.