பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்

ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.  –  (திருமந்திரம் – 517)

விளக்கம்:
நாட்டில் உள்ள சிவன் கோயில்களில் எல்லாம் அன்றாட பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும். அது தவறினால் நாட்டில் குணப்படுத்த முடியாத நோய்கள் பரவும். பருவத்தில் பெய்ய வேண்டிய மழை பொய்த்துப் போகும். அந்நாட்டின் அரசர் போர் செய்யும் வலிமையை இழப்பார்.

2 thoughts on “பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்

Comments are closed.