ஒழுக்கமில்லாத அந்தணர் அர்ச்சனை செய்யக்கூடாது

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்க்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.   – (திருமந்திரம் – 519)

விளக்கம்:
அந்தணர்க்கு உரிய நெறியில் நிற்காமல், பிறப்பினால் மட்டுமே பார்ப்பானாக இருப்பவர்கள் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யக்கூடாது. ஒழுக்கமில்லாத அந்தணர்கள் கோயில்களில் அர்ச்சனை செய்தால், அந்நாட்டில் போர்கள் ஏற்படும். மேலும் அந்நாட்டில் கொடிய வியாதிகளும் பஞ்சமும் பரவும். இவையெல்லாம் நம் நந்தியம்பெருமான் அறிந்து நமக்கு உரைத்திருக்கிறான்.