சிவபுரத்தில் சிறப்பான வரவேற்பு உண்டு!

உடையான் அடியார் அடியா ருடன்போய்
படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலம் என் றாரே. –  (திருமந்திரம் – 547)

விளக்கம்:
எல்லாம் உடையவனான சிவபெருமானின் அடியார்களைத் தேடிச் சென்று நாமும் சிவனடியாராய் ஆவோம். அப்பெரியவர்களின் துணையோடு நாம் தழல் போன்ற மேனியன் ஆன சிவபெருமான் தனது படைகளுடன் வசிக்கும் சிவபுரத்தை அடையலாம். சிவபுர வாயிலை நாம் அடையும் போது நாம் அங்கே வரும் செய்தியை சிவபெருமானிடம் அறிவிக்க, பெருமானும் நம்மை வருக என வரவேற்பார். நாமும் மகிழ்ச்சி தாங்காமல் ஓலமிட்டு அழுவோம்.