சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே!

சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தின் திருநடத் தோரே. – (திருமந்திரம் – 652)

விளக்கம்:
சிவத்தைப் பற்றியே நினைத்திருந்து சித்தமெல்லாம் சிவமயம் ஆகிய சிவமுத்தர் மௌனமே முத்தி அடையும் வழி என்னும் உண்மையை உணர்ந்தவர்கள். அவர்கள் ஐம்புலன்களின் தொடர்பையும் அறுத்து எறிந்து மனம் சுத்தம் பெற்றவர்கள். சுத்தம் பெற்ற அவர்களின் சித்தமெல்லாம் சிவபெருமானின் திருநடனமே நிறைந்திருக்கும். அந்நடனத்திலேயே அவர்கள் மனம் லயித்திருப்பார்கள்.


Also published on Medium.