உடல் தரும் துன்பம் நீங்க …

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒருங்கவல் லார்களுக்
கொன்பது வாசல் உலைநல மாமே. – (திருமந்திரம் – 658)

விளக்கம்:
ஒன்பது வாசல்களைக் கொண்ட இந்த உடல் கொதிக்கும் உலை போல் துன்பப்படுகிறது. நம் உடலின் ஒன்பது நாடிகள் ஒருங்கே கூடும் சுழுமுனையில் மனம் செலுத்தி தொடர்ந்து தியானம் செய்து வந்தால், துன்பம் தரும் இந்த உடல் இன்பம் தருவதாக அமையும்.


Also published on Medium.