சுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே. – (திருமந்திரம் – 660)

விளக்கம்:
வலையில் அகப்பட்ட மான் அங்கும் இங்கும் அசைய முடியாமல் நிற்கும் நிலை போல, சுழுமுனையில் மட்டுமே கவனம் செலுத்தி மூச்சுப்பயிற்சி செய்வோம். அதுவே அட்டமாசித்தியை நோக்கிச் செல்லும் தூய வழியாகும். தொடர்ந்து சுழுமுனையில் நின்று மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் சக்தியாக விளங்கும் குண்டலினி தலைஉச்சியில் இருக்கும் சிவபெருமானை சென்று அடையும். இதனால் கிடைக்கும் பலன்கள் எப்படிப்பட்டது என்றால் உண்பதற்கும் விலைக்கு விற்பதற்கும் சேர்த்து விதை கிடைப்பது போன்றதாகும்.


Also published on Medium.