தியானத்தினால் திருவருளைப் பெறலாம்

நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடி ஒருகை மணிவிளக் கானதே. – (திருமந்திரம் – 667)

விளக்கம்:
தியானத்தின் போது நாடியின் உள்ளே மங்கல ஒலியைக் கேட்கலாம். தியானத்தில் நாம் தேடும் திருவருளைப் பெற்று அத்திருவருளின் துணை கொண்டு, நம்முள் உள்ள காமம், குரோதம் முதலான பகைவர்களைச் செயல் இழக்கச் செய்வோம். தியானத்தில் நாம் பெறும் திருவருள், ஆன்மிகத்தில் நாம் இன்னும் உயர்நிலையை அடைய மணிவிளக்காகத் துணை வரும்.


Also published on Medium.