சித்திகள் மட்டுமல்ல, புத்தியும் கிடைக்கும்!

சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரை
சத்தி அருள்தரத் தானுள வாகுமே. – (திருமந்திரம் – 670)

விளக்கம்:
அட்டாங்க யோகம் அட்டமாசித்திகளைத் தருவதோடு நின்று விடுவதில்லை. அட்டாங்கயோகத்தால் நம் புத்தி தெளிந்து, ஞானம் கிடைக்கும். திரிபுரை எனப்படும் சக்தியே அட்டமாசித்திகளின் மொத்த உருவமாகும். அந்தப் பராசக்தியின் அருளும் அட்டாங்கயோகத்தில் நிற்பவர்களுக்குக் கிடைக்கும்.


Also published on Medium.