இருந்த இடத்திலேயே அட்டமாசித்திகளைப் பெறலாம்!

எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்
இட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி
எட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே. – (திருமந்திரம் – 671)

விளக்கம்:
அட்டாங்க யோகத்தில் நின்று அட்டமாசித்திகளைப் பெற்று, எழில் நிறைந்த பரவெளியைப் பார்த்தவர்கள் சித்தர் ஆவார்கள். அச்சித்தர்கள் பரவெளியில், தாம் விரும்பிய சிவ தரிசனம் பெறுவார்கள். இவையெல்லாம் பெற நாம் எங்கும் எதையும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. நாம் இருந்த இடத்திலேயே தியானம் செய்து பெறலாம்.