கரிமா எனப்படும் சித்தி!

ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலா
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே. – (திருமந்திரம் – 680)

விளக்கம்:
பிராத்தி எனும் சித்தி பெற்று குண்டலினியின் தன்மையையும், ஐம்பூதங்களின் இயக்கத்தையும் தள்ளி நின்று கவனிக்கும் போது எல்லாவற்றையும் மேலிருந்து பார்க்கும் அனுபவம் கிடைக்கும். விண்ணின்று பார்க்கும் இத்தன்மையே கரிமா எனப்படும் சித்தியாகும். இப்படிப் பார்க்கும் போது இந்தப் பூமியின் பரப்பளவை ஒப்பிட்டு நாமெல்லாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை உனரலாம். இந்த உலகத்தின் வயதை ஒப்பிடும் போது நமது வாழ்நாள் எல்லாம் மிக சொற்ப காலமே என்பதும் புரியும். இதனால் காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல் வாழலாம்.