பிராகாமியம்!

ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
மூல விளக்கொளி முன்னே யுடையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடெளி தாநின்றே. – (திருமந்திரம் – 683)

விளக்கம்:
நம்மிடம் மூலாதாரத்தில் ஒரு விளக்கொளி உள்ளது. அதைத் தூண்டி விட்டு, சுடர் மிகச் செய்யும் வழி தெரியாமல் இருக்கிறோம். நறுமணம் மிகுந்த அந்த குண்டலினி என்னும் விளக்கொளியைத் தூண்டி விட்டு அதன் சுடரை உணர்ந்தவர்கள், பெருஞ்சுடரான அந்த சிவபெருமானை எளிதாக உணரலாம்.


Also published on Medium.