மூச்சுக்காற்றே பெருஞ்செல்வம் ஆகும்!

இருநிதி ஆகிய எந்தை இடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுந்தே . – (திருமந்திரம் – 701)

விளக்கம்:
நம்முடைய தலைவனான சிவபெருமான் வசிக்கும் சகசிரதளமும், பிராணாயாமத்தின் போது இயங்கும் மூச்சுமே நாம் பெற்ற பெருஞ்செல்வம் ஆகும். இவற்றை விட பெரிய செல்வம் வேறேதும் இல்லை. பிராணாயாமத்தினால் நமது மூச்சு இயங்கும் கணக்கு இருநூற்று முப்பத்து எட்டாகக் குறைந்து விடும்.