மூச்சுக்காற்றில் பராசக்தி கலந்திருக்கிறாள்

எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருபத்தொன் பானது நாலாய்
எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே . – (திருமந்திரம் – 702)

விளக்கம்:
யோக நிலையில், மூலாதாரத்தில் இருந்து எழுகின்ற சோதியுள் நம் நாயகியாகிய பராசக்தி கலந்திருக்கிறாள். நான்கு இதழ்களை உடைய மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை வழியாக எழுகின்ற குண்டலினி எழுநூற்று இருபத்து ஒன்பது நாடிகளைக் கலந்து செல்கிறது.


Also published on Medium.