அன்பு ஒன்றே சிவனைக் காணும் வழி

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலு மாமே – 712

விளக்கம்:
நம் அண்ணலான நெற்றிக்கண் கொண்ட சிவபெருமானைக் கண்டடையும் வழியை அப்பெருமானே நமக்கு வகுத்துக் கொடுத்துள்ளான். அன்பு என்பதே அவ்வழி! அனைத்தையும் நாம் அன்பெனும் கண்ணோட்டத்திலே காண்போம். அப்படி அன்பு வழியில் நின்று தொடர்ந்து தியானம் செய்து வந்தால், சிவ அருள் வெள்ளமெனப் பெருகி வரும். அவ்வருள் நம்மை என்றென்றும் காத்து நிற்கும்.


Also published on Medium.