மனம் நிலை பெறலாம்

நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
அலைவற வாகும் வழியது வாமே – 714

விளக்கம்:
தியான நிலையிலும் நம் மனம் அலைபாய்வதை நாம் அடிக்கடி உணரலாம். தியானத்தின் போது சந்திரகலைகள் பதினாறிலும் கலந்திருக்கும் சிவசக்தியை உணர்ந்தால், மனம் நிலை பெற்று முழுமையான தியான அனுபவம் பெறலாம். அந்நிலையிலே நம்முடைய மூச்சு சுழுமுனையில் நின்று நேராக இயங்கும். நம்முடைய அறிவு, காற்றில்லாத இடத்தில் ஏற்றப்பட்ட தீபம் போல சுடர் விட்டு ஒளிரும்.


Also published on Medium.