ஊக்கமுடன் தொடர்ந்து தியானம் செய்வோம்

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு ஒளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடும் சாதக னாமே – 716

விளக்கம்:
தியானத்தில் உண்மையாக மனம் ஒன்றி சமாதி நிலையில் நிற்பவர், தாம் எவ்வளவு நேரம் அந்நிலையில் இருந்தோம் என்பதை உணர மாட்டார்கள். அந்த அளவுக்கு மனம் அருள் வெளியில் நிலைத்திருக்கும். தொடர்ந்த பயிற்சியில், சமாதி நிலையில் இருக்கும் கால அளவு பெருகி பெருமை மிக்க சிவ ஆனந்தத்தைப் பெறுவார்கள். பிராணாயாமத்தில் ஒருங்கும் நம் மூச்சுக்காற்று ஒளி பெற்று விளங்கும். இவ்வாறு ஊக்கம் மிகுந்து தொடர்ந்து யோகப் பயிற்சி செய்பவர் சிறந்த சாதகர் ஆவார்.

ஒருக்கு – ஒருங்கு,  தருக்கு – ஊக்கம் மிகுந்து


Also published on Medium.