முதுகுத் தண்டுடன் ஓடித் தியானம் செய்வோம்

தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டலம் மூன்றும் மகிழ்ந்துஉடல் ஒத்திடும்;
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே – 752

விளக்கம்:
யோகநிலையில், குண்டலினியை முதுகுத்தண்டு வழியாக ஏற்றி சகசிரதளத்தை அடையச் செய்பவர்கள் சிவயோகி ஆவார்கள். அவர்களது உடலில் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று மண்டலங்களும் தக்கவாறு அமைந்திருக்கும். இதை அனுபவத்தில் உணர்ந்த சிவயோகிகளுக்கு காலச்சக்கரம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதை உணராத மற்றவர்கள் வினைப்பயனால் கிடைத்த உடலைப் பெரிதாக நினைத்து, இறுதி காலத்தில் உடலை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் துன்புறுகிறார்கள்.


Also published on Medium.