அறிவு பெண்களின் பின்னே செல்ல வேண்டாம்

பிணங்கி அழிந்திடும் பேறுஅது கேள்நீ
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே – 753

விளக்கம்:
யோகவழியில் செல்லாமல் உடலையே பெரிதாக நினைப்பவர்களுக்கு இறுதியில் மரணம் துன்பம் தருவதாக இருக்கும். அவர்களது அறிவு பெண்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருப்பதால், அரும்பாடு பட்டு எடுத்து வந்த இந்தப் பிறவியை வீணாக்குகிறார்கள். யோகம் செய்ய மறுப்பவர்களின் வாழ்க்கை, இறுதியில் ‘நாய்க்கு உணவாகத் தான் இந்த வாழ்க்கையா?’ என்பது போல் இருக்கும்.

 


Also published on Medium.