சாத்திரத்தின் பலன்களைத் தலையில் உணரலாம்

கூத்தன் குறியில் குணம்பல கண்டவர்
சாத்திரம் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந்து உள்ளே அனுபோகம் நோக்கிடில்
ஆத்தனும் ஆகி அமர்ந்திடும் ஒன்றே – 755

விளக்கம்:
கூத்தனாகிய நம் சிவபெருமானைக் குறித்து, யோகநிலையில் பலவித அனுபவங்களை உணர்ந்தவர்கள் சிவயோகி ஆவார்கள். சாத்திரங்களைப் படிப்பதால் ஏற்படும் பலனை, தமது சகசிரதளத்தில் அனுபவமாக உணர்வார்கள். தொடர்ந்து சிவபெருமானைக் குறித்துத் தியானம் செய்து திளைப்பவர்களுக்கு, அந்த சிவபெருமான் நண்பனாக வந்து உள்ளே அமர்வான். இதை விட வேறு என்ன பேறு வேண்டும்?


Also published on Medium.