நந்தியம்பெருமானாக நம்மை வழி நடத்துவான்

கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும்
திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாய்நிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே – 763

விளக்கம்:
சிவபெருமான் நெற்றிக்கண்ணை உடையவன், பிறப்பில்லாதவன். மனத்தை உள்முகமாகத் திருப்பிப் பார்த்தால் உள்ளே நந்தியம்பெருமானாக, நம்மை வழி நடத்தும் குருவாகப் பார்க்கலாம். சிவபெருமான் தனிப் பெரும் ஜோதியானவன், அதன் வெம்மை எல்லாத் திசைகளிலும், எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறது. அவனை நாடி தொடர்ந்த தியானத்தினால் நெருங்க வல்லவர்களுக்கு, அந்த சிவபெருமான் உறுதியான துணையாய் நிற்பான்.


Also published on Medium.