காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
காணலு மாகுங் கலந்த இரண்டையும்
காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்
காணலு மாகுங் கருத்துற ஒன்றே – 780
விளக்கம்:
திருமூலர் அளிக்கும் பயிற்சி முறையைக் கருத்தில் கொண்டு, பத்து நாட்கள் தொடர்ந்து மூச்சுப்பயிற்சி செய்து வந்தால், நம்முள்ளே சிவன், சக்தி ஆகிய இருவரையும் காணலாம். மேலும் தொடர்ந்து, சுழுமுனையில் கருத்தூன்றி, பதினைந்து நாட்கள் மூச்சுப்பயிற்சி செய்தால், சிவசக்தியர் ஒன்றாகக் கலந்து ஒரே பரம்பொருளாக இருப்பதைக் காணலாம்.
Also published on Medium.