சிவம் நம்முள்ளே நின்று திகழும்

அறிவது வாயுவொடு ஐந்தறி வாய
அறிவா வதுதான் உலகுயிர் அத்தின்
பிறிவுசெய் யாவகை பேணிஉள் நாடிற்
செறிவது நின்று திகழும் அதுவே – 787

விளக்கம்:
தொடர்ந்த யோகப்பயிற்சியில் இருப்பவர்கள் பிராணவாயுவின் இயக்கத்தைப் புரிந்து கொள்வதுடன், ஐம்புலன்களின் இயக்கத்தையும் அறிந்து கொள்கிறார்கள். உலக உயிர்கள் அனைத்தும் ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. யோகத்தினாலே ஐம்புலன்களைத் தன் வசப்படுத்தி, மனத்தை உள்முகமாகத் திருப்பித் தியானித்து வந்தால் சிவபெருமானை நெருக்கமாக நம்முள்ளே உணரலாம். சிவம் நம்முள்ளே நின்று திகழும்.


Also published on Medium.