நரைதிரை மாறிடும்!

மேலை யணாவில் விரைந்திரு காலிடிற்
காலனும் இல்லை கதவுந் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி ஆணையே – 805

விளக்கம்:
சுவாசத்தின் போது விரைந்திடும் இடைகலை, பிங்கலை ஆகிய இரண்டு காற்றுக்களையும் மேல் அண்ணாக்கில் செலுத்தி பயிற்சி செய்தால், அண்ணாக்கின் மேலே உள்ள கதவு திறந்து சகசிரதளம் செல்வதற்கான வழி கிடைக்கும். சகசிரதளத்திற்கான கதவு திறக்கப்பட்டவர்களுக்கு மரண பயம் நீங்கும். தலை மயிர் நரை நீங்கி கருமை பெறும், கண் பார்வை தெளிவு பெறும். உலகத்தோர் பார்வையில் நாம் இளைஞனாகத் தெரிவோம். இது பராசக்தி அருள் பெற்ற நந்திதேவரின் ஆணை.

மேலையணா – மேலே உள்ள அண்ணாக்கு, கால் – காற்று, ஞாலம் – உலகம், பரா – சிவசக்தி


Also published on Medium.