உடலும் மனமும் நம் வசப்படும்!

தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்
தலைவனு மாயிடுந் தன்வழி போகந்
தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே – 829

விளக்கம்:
பரியங்கயோகத்தில் நின்று, சிவசக்தியை ஒன்று சேரக் காண்பவர்களுக்கு ஞானம் எல்லாம் வசப்படும். எல்லையில்லாத இன்பம் கிடைக்கும். மனம் வசப்பட்டு அங்கும் இங்கும் அலையாது நிற்கும். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும் நம் வசப்பட்டு நம்முடைய கட்டுப்ப்பாட்டில் இயங்கும்.

உடலும் மனமும் நம் வசத்தில் நின்று, நமக்கு நாமே தலைவனாகலாம்.

அஞ்சு – ஐந்து பொறிகள்