ஒரு அடியார் போதும், நாடே சுபிட்சமாகும்

திகைக்குரி யானொரு தேவனை நாடும்
வகைக்குரி யானொரு வாது இருக்கில்
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. – (திருமந்திரம் – 1868)

விளக்கம்:
அனைத்து திசைகளுக்கும் உரியவனான சிவபெருமானை, இனத்திற்கு ஒருவராது நாடி இருப்பார் ஆகில், அங்கே பகைவர் என்று யாரும் இருக்க மாட்டார். தவறாமல் மழை பெய்யும். யாருக்கும் மனக்குறை என்பது இராது. அந்த உலகத்தில் கெடுதல் என்பதே இராது.

(திகை – திசை,   அகக்குறை – மனக்குறை)

The Lord spreads over all directions.
If there is a man who pursue the Lord and remain so,
There will be no enmity there, rain will not fail
No dissatisfaction there, evil will not near that world.