சீவனும் சிவனும் வேறில்லை

சீவன் எனச்சிவன் என்னவே றில்லை
சீவ னார்சிவ னாரை அறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே. – (திருமந்திரம் – 2017)

விளக்கம்:
சீவனும் சிவனும் வேறு வேறு பொருள்களில்லை. இரண்டும் ஒன்றாய் கலந்திருப்பவை. ஆனால் சீவன்கள் தன்னிடம் உள்ள சிவனை அறிந்திருக்கவில்லை. ஞானம் பெற்று சிவனை அறிந்த பின் சீவனார் சிவனாகவே ஆகி விடுவார்.

Jiva and Siva are not seperated
But the jivas do not know this truth.
When the jiva realize this truth,
that jiva will become Siva.