நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உன்னார்
நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்
நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே. – (திருமந்திரம் – 2022)
விளக்கம்:
நாள்தோறும் ஈசன் நடத்தும் தொழிலை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. நாள்தோறும் நயமாய் நல்ல பலன் ஊட்டும் ஈசனை நாடுவதில்லை. நாள்தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் செய்து வந்தாலும், நாள்தோறும் அவனை நாடாமல் நம்முடைய அன்றாட வேலைகளில் சிக்கிக் கொள்கிறோம்.
We don't think of Lord Siva's daily deeds. We don't think of His good feeding to us. He is bestowing His Grace daily to good people. We don't seek Him daily, we are entangled in our daily works.