ஈசனைத் தின்பேன், கடிப்பேன்

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.  – (திருமந்திரம் – 2980)

விளக்கம்:
என் சிவபெருமானை நினைந்து உள்ளம் உருகி அழுவேன், புலம்புவேன். எலும்புகள் உருகும் அளவுக்கு இரவும் பகலும் அவனை வணங்கி இருப்பேன். என் பொன்மணியாம் அந்த இறைவனை, ஈசனைத் தின்பேன், கடிப்பேன். அவனை உறவாக்கி நட்பு கொள்வேன்.

கடிப்பேன், தின்பேன் என்பவை பக்தி மேலீட்டால் சொல்லப்பட்டவை.

(அரற்றுவன் – புலம்புவேன்,    என்பு – எலும்பு,   திருத்து – உறவாக்கு)

With melting heart, I moan and cry,
I adore you day and night, as if my bones are melting.
He is my gold, my Lord, my Siva,
I eat Him, bite Him in passion and make him friendly.