உதயசூரியன் அவன்!

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே.   – (திருமந்திரம் – 116)

விளக்கம்:
மூங்கிலில் மறைந்திருக்கும் தீயைப் போன்று,  தலைவனான நந்தி நம் உடல் எனும் கோயிலில் குடி கொண்டுள்ளான். நம்முடைய மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை ஒரு தாயைப் போல போக்கி அருளும் அவன் கடலில் இருந்து உதித்து எழும் சூரியன் போன்றவன் ஆவான்.

(வேய் – மூங்கில்,   தயா – அருள்,   தோயமதாய் – கடலிடமாய்)

Like the fire indwells inside bamboo,
Our Lord Nandi resides inside our body - temple.
Like a mother, He remove our three impurities and
arise in our heart like the sun from the ocean.