வணங்கி நின்றார்க்கு வழித்துணை அவனே

இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. – (திருமந்திரம் – 28)

விளக்கம்:
எல்லா உயிர்களுக்கும் இணக்கமாய் இருக்கிறான் சிவபெருமான். அவன் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை. உலகின் அனைத்துப் பொருள்களிலும் பின்னியவாறு விரவி உள்ளான். இறந்தகாலம், எதிர்காலம் எல்லாம் அவனே.  தேவர் உலகின் தலைவனான அவன் தனக்கென்று எந்த செயலும் இல்லாமல் இருக்கிறான். அவன் தன்னை வணங்கி வழிபடுபவர்க்கு வழித்துணையாக வருவான்.

(பிணங்கி – பின்னியவாறு, உணங்கி – செயலற்று)

He comply with every one, He exists every where.
He intertwined with every thing in this world.
He is the past and future. He is the Lord of Amaravati.
He'll be a guide for those who worship Him.