என் வழி – தனி வழி

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே. – (திருமந்திரம் – 35)

விளக்கம்:
சிவபெருமான் தனக்கென தனி வழி உடையவன். அப்பெருமானைப் போற்றுவோம், போற்றிப் புகழ்வோம். அவ்வாறு புகழ்ந்தால் அந்த ஈசன் மேலுலகத்தையும், நிலவுலகில் உள்ள எட்டுத் திசைகளையும் நமக்கு அருள்வான். அவற்றை நம் விருப்பப்படி ஆளலாம்.

The Lord has His own way.
Let us praise and sing over Him.
If we praise him, He'll grant us all the eight directions
and the Celestial World, we can rule over them.