உண்மையான இன்பம் வீட்டில் இருக்கிறது

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே.  – (திருமந்திரம் – 205)

விளக்கம்:
இல்லற வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் மனைவியிடம் இன்பத்தை நாடும்போது, அங்கே அவர்கள் இருவரும் சுனைநீரின் நீர்ச்சுழியில் மூழ்குவது போல இன்பத்தில் மூழ்குவார்கள். இதுவே உண்மையான இன்பமாகும். பொதுமகளிரிடம் காணும் இன்பம் என்பது கனவில் தோன்றும் சிறுஇன்பம் போன்றதாகும். அதை உண்மை என்று நம்பி நாட வேண்டாம்.