தியானத்தில் மூன்று மண்டலங்களைக் காணலாம்

அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே.  –  (திருமந்திரம் – 613)

விளக்கம்:
சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று மண்டலங்களில், ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு தன்மை உண்டு. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு தேவர் உண்டு. அத்தேவர்கள் அவரவர் மண்டலத்தில் இருந்தவாறு ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள்.

தியானம் செய்பவர்கள் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று மண்டலங்களிலும் பொருந்தி இருப்பார்கள்.