அன்பெனும் தேரில் ஏறி

காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.  – (திருமந்திரம் – 226)

விளக்கம்:
அந்தணர்கள் காயத்திரி, சாவித்திரி ஆகிய ஞான சக்திகளை ஆய்வு செய்ய விரும்புவார்கள். அதற்காக அவர்கள் மந்திரங்களை எல்லாம் மனனம் செய்கிறார்கள். அன்பெனும் தேரில் ஏறி தம்முடைய கடமைகளை நினைவில் கொண்டு, மாயத்தில் சிக்காமல் இருப்பவர்கள் சிறந்த பிராமணர் ஆவார்கள்.