நூல் ஏணி

ஆய்ந்துகொள் வார்க்குஅரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூலேணி யாமே. – (திருமந்திரம் –296)

விளக்கம்:
சூரியனின் ஒளி எல்லாப் பக்கங்களிலும் பரவி இருந்தாலும், சூரியகாந்தக் கல்லால் மட்டுமே சூரிய ஒளியை உள்வாங்கி நெருப்பை வெளியே சிதற விட முடியும். அது போல இறைவன் எங்கும் பரவி இருக்கிறான் என்றாலும், கல்வி கற்றவர்களாலேயே அந்த இறைவனை உணர முடியும். இளஞ்சந்திரனை தன் நெற்றியில் அணிந்துள்ள சிவபெருமானை அடைய வல்லவர்களுக்கு சிறந்த நூல்களை ஏணியாகப் பற்றிக்கொள்ளக் கூடிய மனம் வாய்க்கும்.