சிவகதி பெறும் வழி!

அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.  – (திருமந்திரம் –300)

விளக்கம்:
சிவகதி பெற நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியவை –

  • அறங்களைப் பற்றிய விஷயங்கள்
  • அந்தணர்களின் அறிவுரைகள்
  • வலிமையாக இருப்பதற்கான வழிகள்
  • தேவர்களின் வழிபாட்டு மந்திரங்கள்
  • பிற சமயங்களில் சொல்லப்படும் கருத்துக்கள்
  • பொன் போன்ற மேனி கொண்ட நம் சிவபெருமானின் திறம்

இவற்றை நாம் கேட்டுத் தெரிந்து கொண்டு சிவகதி பெறுவோம்.