திவ்விய மூர்த்தியை அறிவோம்!

தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.  – (திருமந்திரம் –301)

விளக்கம்:
சிவபெருமான் தேவர்களுக்கு எல்லாம் தலைவன் ஆவான். அந்த திவ்விய மூர்த்தியின் பெருமையைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவில்லை. அவனது பெருமையை நாம் அறிந்து கொண்டு, அவனைப் பற்றிய நூல்களைப் படிப்போம், அவனைப் பற்றி மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம். கற்றும் கேட்டும் அவனை உணர்வோம். உணர்ந்த பின் அவனது புகழைப் பாடி உயர்வு பெறுவோம்.