அந்தகன் எனப்படும் நம்முடைய ஆணவம்

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்க்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே. – (திருமந்திரம் – 339)

விளக்கம்:
நம்முள்ளே அந்தகன் என்னும் அசுரன் ஒருவன் வாழ்கிறான். அவனால் மற்றவர்களுக்குத் துன்பம் உண்டாகிறது. இப்படி ஒருவருக்கு ஒருவர் துன்பம் விளைவிப்பதால், உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் வருந்துகிறார்கள். இது பற்றித் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, நம் பெருமான் தன்னுடைய சூலத்தின் நுனியினால் நம்முள்ளே இருக்கும் அந்த அசுரனைக் கொன்றான்.

சிவபெருமானை வேண்டினால், நம்முடைய ஆணவம் அழியும்.