திருவழுவூர்

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரியர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே. – (திருமந்திரம் – 344)

விளக்கம்:
முனிவர்கள் சிலர் வேள்வித்தீயை எழுப்பி மந்திரங்களை முழங்கிய போது, அந்த வேள்வியுள் யானை உருவில், கயாசுரன் என்னும் அசுரன் தோன்றினான். சிவபெருமான் அந்த யானை வடிவிலான அசுரனை அழித்து, அந்த யானைத் தோலை உரித்து தன் மேல் போர்த்திக் கொண்டான். சிவபெருமானின் இந்த வீரச்செயலைக் கண்டு உமையம்மையும் மற்ற தேவர்களும் நடுங்கினார்கள். இந்த வீரச்செயல் நடந்த இடம் திருவழுவூர்.

தியானத்தில், நம் உள்ளே முன்று வகையான அக்னியை எழுப்பி நாதம் வெளிப்படச் செய்தால், யானை போன்ற கரிய இருளான நம் மன இருளை சிவபெருமான் கிழித்து ஒளி தோன்றச்செய்வான்.

One thought on “திருவழுவூர்

Comments are closed.