திருக்கடவூர்

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே. – (திருமந்திரம் – 345)

விளக்கம்:
மூலாதாரத்தில் மூளும் குண்டலினியை, தியானத்தினால் சுழுமுனை நாடி வழியாக சகஸ்ரதளத்தில் பொருந்தி இருக்கச் செய்வது அங்கி யோகமாகும். இந்த யோகத்தைப் பயில்வதால் காலனை எட்டி உதைக்கலாம். நம்முடைய உடல் என்னும் இந்த ஊர் நலமாக இருக்கும்.

சிவபெருமான் காலனைக் காலால் எட்டி உதைத்த வீரச்செயல் நடந்த இடம் திருக்கடவூர். நம்முடைய இந்த உடலையும் கடவூர் என்று சொல்லலாம்.

கடம் – உடல்